ஆப்நகரம்

ரேன்சம்வேர் வைரஸ் எங்களுதா? எகிறி குதித்து ஓடிய வடகொரியா...!

ரேன்சம்வேர் வைரஸுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

TNN 21 May 2017, 5:05 pm
சியோல்: ரேன்சம்வேர் வைரஸுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
Samayam Tamil north korea denies role in global cyberattack
ரேன்சம்வேர் வைரஸ் எங்களுதா? எகிறி குதித்து ஓடிய வடகொரியா...!


’வான்னா கிரை ரேன்சம்வேர்’ என்ற வைரஸ் தாக்குதலால் உலகெங்கும் உள்ள ஏராளமான கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டரில் உள்ள முக்கிய தகவல்களை பயன்படுத்த முடியாமல் லாக் செய்து விடுகிறது. அதிலிருந்து விடுவிக்க பிட் காயின்களை கேட்கிறது. அதனால் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். அதற்கான தீர்வு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள மட்டுமே அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து ரேன்சம்வேர் வைரஸ் குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கூகுள் நிறுவன வல்லுநர் நீல் மேத்தா, ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலுக்கு பின்னணியில் வடகொரியாவின் பங்கு இருக்கக்கூடும் என்று கூறினார். அதையே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளும் தெரிவித்தன. இந்த குற்றச்சாட்டுக்களை வடகொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து பதிலளித்து பேசிய வடகொரிய துணைத்தூதர் கிம் இன் போன், எதற்கெடுத்தாலும் வடகொரியாவை வம்புக்கு இழுக்கக்கூடாது என்று குறிப்பிட்டார்.

North Korea yesterday angrily dismissed reports linking its isolated regime to the global cyberattack that held thousands of computers to virtual ransom.

அடுத்த செய்தி