ஆப்நகரம்

மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்திய வட கொரியா!

வடகொரியா புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளதாக தென் கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

TNN 29 Nov 2017, 3:59 am
வடகொரியா புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளதாக தென் கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Samayam Tamil north korea missile launch is the highest yet poses worldwide threat us defense secretary mattis
மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்திய வட கொரியா!


தென் பியாங்யாங் பிராந்தியத்தில் பியாங்யாங்கிலிருந்து கிழக்கு நோக்கி புதிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று ஏவப்பட்டதாக தென்கொரியா ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், அந்த புதிய பாலிஸ்டிக் ஏவுகணை எவ்வளவு தூரம் செல்லக்கூடிய திறன் பெற்றது என்பது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், ஏற்கனவே ஏவப்பட்ட ஏவுகணைகளைப் போன்று இந்த ஏவுகணையும் ஜப்பான் மீது பறந்து சென்றதா? அல்லது வேறு திசையில் ஏவப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை.

North Korea missile launch is the highest yet, poses worldwide threat, US Defense Secretary Mattis says: AFP — ANI (@ANI) November 28, 2017 இந்த ஆண்டு வட கொரியா பல ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதில், கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏவப்பட்டுள்ள புதிய பாலிஸ்டிக் ஏவுகணை தொடர்பாக அமெரிக்கா மற்றும் தென் கொரியா அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்று தென் கொரிய ராணுவ தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

After North Korea test, US President Donald Trump says "We will take care of it": AFP — ANI (@ANI) November 28, 2017 தற்போது ஏவப்பட்டுள்ள ஏவுகணை தொடர்பாக தென்கொரியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என தென்கொரிய ராணுவத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. இந்த புதிய ஏவுகணை தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில், நாங்கள் அதனைப் கவனித்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி