ஆப்நகரம்

கோமா நிலையில் வடகொரிய அதிபர்? - ஆட்சி அதிகாரத்தில் தங்கை!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருப்பதாகவும், இதையடுத்து அவரது தங்கையான கிம் யோ ஜாங்கிடம் ஆட்சி, அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Samayam Tamil 25 Aug 2020, 12:26 am
தென் கொரியாவின் மறைந்த அதிபரான கிம் டே ஜங்கின் முன்னாள் உதவியாளர் சாங் சாங்மின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அண்மையில் கூறியது கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை பற்றவைத்தது.
Samayam Tamil korea


இந்த நிலையில், "தற்போது தமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, கிம் ஜாங் உன் கோமா நிலையில்தான் இருக்கிறார். ஆனால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.

அதேசமயம், ஆட்சி, அதிகாரத்தில் வெற்றிடம் தோன்றிவிடக்கூடாது என்பதாலேயே, அவரது தங்கையிடம் கிம் யோ ஜாங் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளார் என்று ஊடக செய்திகள் மூலம் அறிகிறேன்" என்று சாங் சாங்யின் தெரிவித்துள்ளது மீண்டும் கொரிய அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென கோமா நிலைக்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர்... தேநீரில் விஷம் கலக்கப்பட்டதா?

கிம் ஜாங், இந்த ஆண்டு இதுவரை சில முறை மட்டுமே ஊடகங்களில் தோன்றினார். இதன் காரணமாக அவர் இறந்துவிட்டார் என்பது போலும், அவருக்கு மேற்கொண்ட இதய அறுவை சிகிச்சை சிக்கலில் முடிந்தது எனவும் சில மாதங்களுக்கு முன் தகவல்கள் பரவின.

ஆனால், இந்த தகவல்களெல்லாம் வெறும் வதந்தி என்பது போல, தலைநகருக்கு அருகே சூச்சோன் பகுதியில் கிம் ஜாங் ஒரு தொழிற்சாலை திறப்பு விழாவில் பங்கேற்று, தன்னை பற்றிய அனைத்து லதந்திகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி