ஆப்நகரம்

வடகொரிய அதிபர் வெறிபிடித்து ஆசியாவை அழிக்கப் போகிறார்; பிலிப்பைன்ஸ் அதிபர்

வடகொரிய அதிபர் வெறிபிடித்து ஆசியாவை அழிக்கப் போகிறார் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

TNN 2 Aug 2017, 7:59 pm
மணிலா: வடகொரிய அதிபர் வெறிபிடித்து ஆசியாவை அழிக்கப் போகிறார் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil north korea president will destroy asia says philippines president
வடகொரிய அதிபர் வெறிபிடித்து ஆசியாவை அழிக்கப் போகிறார்; பிலிப்பைன்ஸ் அதிபர்


பிராந்திய உச்சி மாநாடு விரைவில் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய பிலிப்பைன்ஸ் அதிபர் டியுடெர்ட், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், மிகவும் வெறிபிடித்த மனிதர் என்று கூறினார். அவரின் தொடர் அணு ஆயுத சோதனைகள் உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. வரம்பு மீறும் அவரின் செயல்களால் ஆசியா கண்டமே அழிந்து விடும் போலிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

ஒருவேளை அணுஆயுத போர் நடைபெற்றால் மண் வளம் அழிந்து, எதையுமே உற்பத்தி செய்ய முடியாத சூழல் ஏற்படும் என்று குறிப்பிட்டார். வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளால் பல்வேறு நாடுகள் ஏராளமான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனால் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

North Korea President will destroy Asia says Philippines President.

அடுத்த செய்தி