ஆப்நகரம்

கொரோனா தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து இல்லை.. நிம்மதியான செய்தி மக்களே!

கொரோனா தடுப்பூசியால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என நார்வே அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 19 Jan 2021, 9:16 pm
நார்வே நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதில், தடுப்பூசி போட்டுக்கொண்ட 33 பேர் உயிரிழந்தது நார்வே நாட்டில் மட்டுமல்லாமல் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Vaccine


இதனால் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் சந்தேக மனநிலைக்கு தள்ளப்பட்டன. ஏனெனில், ஃபைசர் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி தடுப்பூசிகளை வாங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம் செய்துள்ளது. நார்வே நாட்டில் போடப்பட்டு வருவது ஃபைசர் தடுப்பூசி என்பதால் ஆஸ்திரேலியாவுக்கு அச்சம் தொற்றிக்கொண்டது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 108 வயது பெண்மணி!
இந்நிலையில், தடுப்பூசிக்கும் அவர்களுக்கு மரணத்துக்கும் தொடர்பில்லை என நார்வே அரசு தெரிவித்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களில் 13 பேரின் உடல் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த 13 பேரில் அனைவருமே வயது மூப்பின் காரணமாகவும், சீரியஸான நோய்களாலும், உடல் பலவீனத்தாலும் உயிரிழந்துள்ளதாக நார்வே பொது சுகாதார கழகத்தின் இயக்குநர் காமில்லா ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு பயந்து ஏர்போர்ட்டில் 3 மாதம் பதுங்கிய இந்தியர்.. அதிர்ந்துபோன நீதிபதி!
நார்வேயின் அண்டை நாடுகளான ஸ்வீடன், டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். ஆனால், அவர்கள் மரணத்துக்கு தடுப்பூசி காரணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி