ஆப்நகரம்

இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினத்தில் தீவிரவாதிகளுக்கு ஒபாமா எச்சரிக்கை

அமெரிக்காவின் வர்த்தக மையமாக இருந்த இரட்டை கோபும் தாக்கப்பட்ட 15வது ஆண்டு நினைவு தினத்தின்போது அமெரிக்க அதிபர் ஒபாமா தீவிரவாதிகளை எச்சரித்தார்.

TOI Contributor 12 Sep 2016, 12:13 am
பெண்டகன் :அமெரிக்காவின் வர்த்தக மையமாக இருந்த இரட்டை கோபும் தாக்கப்பட்ட 15வது ஆண்டு நினைவு தினத்தின்போது அமெரிக்க அதிபர் ஒபாமா தீவிரவாதிகளை எச்சரித்தார்.
Samayam Tamil 11 victims says groups like al qaida isil will never be able to defeat the us
இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினத்தில் தீவிரவாதிகளுக்கு ஒபாமா எச்சரிக்கை


கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 2 விமானங்களை கொண்டு, அமெரிக்க வர்த்தக மையமான 110 அடுக்கு மாடிகளை கொண்ட இரட்டை கோபுரம் மீது மோதி தகர்க்கப் பட்டது. இந்த கோர தாக்குதலில் 2997 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதன் 15-வது நினைவு தினம் செப்டம்பர் 11ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

உலகையே அச்சுறுத்திய இந்த தீவிரவாத தாக்குதலின் நினைவு தினத்தி போது அமெரிக்க அதிபர் ஒபாமா உரை நிகழ்த்தினார்.
அதில், “அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் கிட்டத்தட்ட 3000 உயிர்களை எங்களிடம் இருந்து தீவிரவாதிகள் பிரித்து விட்டனர்.

இது அமெரிக்காவின் மிகவும் சோகமான தினம். இதற்கு காரணமான அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். இனி அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த எண்ணம் கொண்டுள்ளவர்களுக்கும் இதே தண்டனை தான். இந்த சம்பவம் மூலம் நாங்கள் மிகவும் விழிப்படைந்துள்ளோம். இனி எந்த ஒரு தீவிரவாத தாக்குதலும் நடத்த முடியாது.



எங்கள் நாட்டின் பாதுகாப்பு தற்போது மிகவும் பாதுகாப்பானதாக ஆக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா எப்பொழுதும் போராடும்.
இந்த தாக்குதலின் போது இறந்த 3000 பேருக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ” என பேசினார்.

அடுத்த செய்தி