ஆப்நகரம்

கடந்த நூறாண்டில் கடல் நீர்மட்டம் 14 செ.மீ. உயர்வு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புவி வெப்பம் காரணமாக, கடந்த நூறாண்டுகளில், கடல் நீர் மட்டம் 14 செ.மீ.அதிகரித்துள்ளதாக, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

TOI Contributor 25 Feb 2016, 5:07 pm
புவி வெப்பம் காரணமாக, கடந்த நூறாண்டுகளில், கடல் நீர் மட்டம் 14 செ.மீ.அதிகரித்துள்ளதாக, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil ocean water level increases 14 cm in last 100 years report indicates
கடந்த நூறாண்டில் கடல் நீர்மட்டம் 14 செ.மீ. உயர்வு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்


அமெரிக்காவின் ரட்கர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் காப் தலைமையில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள், அந்நாட்டின் தேசிய அறிவியல் அகாடமி இதழில் வெளியிடப்பட்டது.

அதில், கடந்த 1900 தொடங்கி, 2000 ம் ஆண்டு வரை தொழில் புரட்சி காரணமாக, ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. இதனால், புவி வெப்பமும் இயல்பை விட இருமடங்காக அதிகரிக்கத் தொடங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த 27 நூற்றாண்டுகளில் இல்லாத வகையில் கடந்த நூற்றாண்டில் மட்டும் கடல் நீர்மட்டம் 14 செ.மீ. அதிகரித்துள்ளது. புவி வெப்பம் உயராவிட்டால், 20-ம் நூற்றாண்டில் கடல் நீர்மட்டம் 7 செ.மீ.க்கும் குறைவாகவே அதிகரித்திருக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3,000 ஆண்டு அளவில் நோக்கும்போது, 20-ஆம் நூற்றாண்டில்தான் கடல் நீர்மட்டம் அபரிமிதமான அளவு உயர்ந்திருக்கிறது. பூமியின் சராசரி வெப்ப நிலை, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்ததைவிட தற்போது 1 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக உள்ளதாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி