ஆப்நகரம்

பெருங்கடல்களில் மீன்களை மிஞ்சும் பிளாஸ்டிக் கழிவுகள்: 2050ஆம் ஆண்டின் அதிர்ச்சி தகவல்

வரும் 2050ஆம் ஆண்டு, பெருங்கடல்களில் மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவு காணப்படும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

TNN 17 Jan 2017, 7:12 pm
டெல்லி: வரும் 2050ஆம் ஆண்டு, பெருங்கடல்களில் மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவு காணப்படும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil oceans may have more plastic than fish by 2050 says study
பெருங்கடல்களில் மீன்களை மிஞ்சும் பிளாஸ்டிக் கழிவுகள்: 2050ஆம் ஆண்டின் அதிர்ச்சி தகவல்


உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் தேவை இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதனை தவிர்க்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் கழிவுகள் அனைத்தும் கடலில் கலந்து மாசுபடுத்தி விடுகின்றன. இந்நிலையில் டெல்லியில் 40 தொழிற்துறை நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அவ்வாறு உடனடியாக திட்டங்கள் தீட்டி, செயல்படுத்தாவிட்டால் வரும் 2050ஆம் ஆண்டு பெருங்கடல்களில் மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம் இருக்கும் என்று தெரிவித்தனர். தற்போது 14% பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. அதனை 70 % மாற்ற வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

The World Economic Forum has reported that there could be more plastics than fish (by weight) in the ocean by 2050, if no action is taken immediately.

அடுத்த செய்தி