ஆப்நகரம்

பதவியை பறிகொடுத்த ரணில்; நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனே நடத்த கோரிக்கை!

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 27 Oct 2018, 1:18 pm
இலங்கையில் கடந்த 2015ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரா கட்சியின் சிறிசேனா வெற்றி பெற்றார். அதே ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்கிரமசிங்கே அதிக இடங்களில் வெற்றி பெற்றார்.
Samayam Tamil Ranil


இதையடுத்து சிறிசேனா ஆதரவுடன், பிரதமராக ரணில் பதவியேற்றார். இந்நிலையில் சமீபத்தில் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் ரணில் கட்சிக்கு அளித்த ஆதரவை சிறிசேனா வாபஸ் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து இலங்கை மக்கள் முன்னணி தலைவரும், முன்னாள் அதிபருமான ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். அவர் நேற்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.

அதேசமயம் தாம் இன்னும் பிரதமர் பதவியில் நீடிப்பதாகவும், பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறப் போவதில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்கே கூறி வருகிறார். தமக்கு இன்னும் பெரும்பான்மை இருப்பதாகவும், ராஜபக்சே நியமனம் சட்டவிரோதம் என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நாடாளுமன்றத்தில் தேவையான ஆதரவு இருப்பதால், வாக்கெடுப்பு நடத்த சிறப்புக் கூட்டத்தை உடனே நடத்த ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

Ousted Sri Lanka Prime Minister Seeks Emergency Parliament Session.

அடுத்த செய்தி