ஆப்நகரம்

சீனாவில் கடும் நிலச்சரிவு : 140 பேர் பலி என தகவல்

​ சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 140 பேருக்கு மேல் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TOI Contributor 24 Jun 2017, 3:16 pm
சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 140 பேருக்கு மேல் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil over 140 people feared buried in china landslide
சீனாவில் கடும் நிலச்சரிவு : 140 பேர் பலி என தகவல்


தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகணத்தில் சின்மோன் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் மலையடிவாரத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் பெருமழை பெய்ததால் திடிரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அந்த கிராமத்தில் இருந்த 40-க்கு மேற்பட்ட வீடுகள் சிக்கியுள்ளனர்.

மேலும் 140-பேருக்கு மேற்பட்டோர் அந்த நிலச்சரிவில் சிக்கி பலியாகியிருக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலச்சரிவினால் 2 கிலோ மீட்டர் ஆறுப்பகுதியும், 1.6 கிலோ மீட்டர் சாலையும் தடைபட்டுள்ளது.

இந்தநிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அந்த நாட்டு மக்களும், மீட்பு படையினரும் ஈடுப்பட்டு வருகின்றனர். மலைஅடிவாரங்கள் மற்றும் கிராமப் புறங்களில் பெருமழையால் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது, அதில் சிக்கி பல மக்கள் தங்களது உயிரை இழப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

அடுத்த செய்தி