ஆப்நகரம்

300 கோடி பேருக்கு ஆபத்து: கழுத்தை நெரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு!

உலகளவில் 300 கோடிக்கும் மேலானோர் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாக ஐநா எச்சரித்துள்ளது.

Samayam Tamil 27 Nov 2020, 7:38 pm
உலகளவில் விவசாய பகுதிகளில் வசிக்கும் மக்களில் 320 கோடி பேர் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாகவும், அவர்களில் 120 கோடி பேர் மிகவும் மோசமான அளவுக்கு நீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாகவும் ஐநா அறிக்கை கூறுகிறது.
Samayam Tamil over 300 crore people affected by water shortages un report
300 கோடி பேருக்கு ஆபத்து: கழுத்தை நெரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு!


​ஆய்வு

ஐநாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில் உலகளவில் உணவு மற்றும் விவசாயத்தின் நிலை குறித்தும், தண்ணீர் தொடர்பான சவால்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் ஒவ்வொரு நபருக்கும் கிடைத்த நீரின் அளவு குறித்து இந்த ஆய்வு கூறுகிறது.

​கடும் நீர் தட்டுப்பாடு

உலகளவில் சுமார் 150 கோடி பேர் மிகவும் மோசமான தண்ணீர் தட்டுப்பாடு அல்லது வறட்சியை சந்தித்து வருவதாக இந்த ஆய்வு கூறுகிறது. தண்ணீரை சரியாக சேமிக்காததாலும், பிரச்சினையை சரியாக கையாளாததாலும் உலகளவில் பல நூறு கோடி மக்கள் பசியையும், உணவு பற்றாக்குறையையும் சந்திக்கப்போவதாக இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

​ஆபத்தில் விளைநிலங்கள்

உலகின் ஒட்டுமொத்த விளைநிலங்களில் 10 விழுக்காட்டுக்கும் மேலான நிலங்கள் வறட்சியை சந்திக்கப்போவதாகவும், மேய்ச்சல் நிலங்களில் 14 விழுக்காடு நிலங்கள் கடும் வறட்சியை சந்திக்கப்போவதாகவும் இந்த ரிப்போர்ட் எச்சரித்துள்ளது.

​ஓசோனை பாதிக்காத விவசாய முறை

ஓசோன் மண்டலத்தை பாதிக்கும் பொருட்களை விவசாயத்துக்கு பயன்படுத்துவதை குறைத்து வளிமண்டலத்தை பாதுகாக்க வேண்டுமென ஐநாவின் அறிக்கை அறிவுறுத்தியுள்ளது.

​நீரை குறைவாக பயன்படுத்தும் உணவுகள்

தண்ணீர் குறைவாக தேவைப்படும் உணவுப் பொருட்களை ஊக்குவிக்க வேண்டுமென இந்த அறிக்கை கூறுகிறது. உதாரணமாக, காய்கறிகள், விதைகள், கோழி இறைச்சி, பால் பொருட்களின் உற்பத்திக்கு மிதமான தண்ணீரே தேவைப்படுவதாக ஐநாவின் அறிக்கை கூறுகிறது.

அடுத்த செய்தி