ஆப்நகரம்

பெருமழையால் வெள்ளக் காடான இலங்கை; 45,000 மக்கள் சிக்கித் தவிப்பு!

கொழும்பு: தொடர் மழையால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

Samayam Tamil 23 Dec 2018, 8:55 pm
இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் கனமழையால் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதாவது முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, ஜாப்னா ஆகிய மாகாணங்கள் பெரிதும் தவித்து வருகின்றன.
Samayam Tamil Srilanka Rains


இங்கு 14,00 குடும்பங்களைச் சேர்ந்த 45,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8,539 பேர் 52 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். முல்லைத்தீவு சாலைகள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் இரனைமது டேங்கின் அனைத்து கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. இதையடுத்து அங்கிருந்த ஏராளமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடற்படை மற்றும் ராணுவ வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி