ஆப்நகரம்

கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர் மரணம்: அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நபர் பிரேசிலில் உயிரிழந்துள்ளார்.

Samayam Tamil 21 Oct 2020, 11:49 pm

கடந்த சுமார் 10 மாதங்களாக கொரோனா வைரஸ் உலக மக்களை பாடாய் படுத்தி வருகிறது. எவ்வளவோ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
Samayam Tamil Vaccine


கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் மிகத் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. சில தடுப்பூசிகள் பல்வேறு கட்ட சோதனை நிலைகளில் இருக்கின்றன.

இதில், இங்கிலாந்து சார்பில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் - அஸ்ட்ராஜெனெகா கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பூசி முன்னணில் இருக்கிறது. இந்த தடுப்பூசி தற்போது தன்னார்வலர்களுக்கு போடப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த தடுப்பூசி போடப்பட்ட தன்னார்வலர் ஒருவர் இறந்துவிட்டதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.

நிர்வாண படங்களை வெளியிடும் மோசடி கும்பல்: பெண்களே உஷார்!

தன்னார்வலர் இறந்தாலும் தடுப்பூசி சோதனை தொடரும் என பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. பிரேசிலில் தடுப்பூசி சோதனை ஒருங்கிணைப்பு பணிகளை ஸா பாலோ பல்கலைக்கழகம் கவனித்து வருகிறது. தடுப்பூசி போட்டபின் இறந்த நபர் பிரேசில் நாட்டை சேர்ந்தவர் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இறந்தவர் பற்றிய கூடுதல் விவரங்கள் இதுவரை வெளியாகியுள்ளது. இந்த செய்தி வெளியாகியபின் அஸ்ட்ராஜெனெகா பங்கு விலை 1.7% சரிந்துள்ளது. ஆஸ்ஃபோர்டு கோவிட்-19 தடுப்பூசியை அதிகளவில் கொள்முதல் செய்ய பிரேசில் திட்டமிட்டுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. பிரேசிலில் இதுவரை கொரோனாவால் 52 லட்சத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 154,000க்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த செய்தி