ஆப்நகரம்

இனி 5 நிமிடத்தில் கொரோனாவை கண்டுபிடிச்சிடலாம்!

வெறும் ஐந்து நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனை முறையை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

Samayam Tamil 15 Oct 2020, 4:03 pm

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுக்க அதிவேகத்தில் பரவிவிட்டது. கடந்த சுமார் 10 மாதங்களாக மனித இனமே ஒன்றுபட்டு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் தாண்டி கொரோனா நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது.
Samayam Tamil Covid-19 test


உலகளவில் இதுவரை 3.85 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2.67 கோடி பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 10.9 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி கண்டுபிடிப்பதே ஒரே வழி என்ற மனநிலை பரவலாகியுள்ளது. தடுப்பூசிக்காக இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் மிகக் கடுமையாக முயற்சித்து வருகின்றன. இதில் சில தடுப்பூசிகள் ஆரம்பகட்ட பரிசோதனையில் வெற்றியும் பெற்றுவிட்டன.

மீண்டும் கிளம்பிருச்சு கொரோனா; அவசர அவசரமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு!

தடுப்பூசி கண்டுபிடிப்பது முக்கியமானதுதான் என்றாலும், கொரோனா தொற்றை விரைவாக கண்டுபிடிக்க வேண்டியது மிக அவசியம். தற்போது மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று முடிவுகள் வர சில தினங்கள் ஆகிறது.

இந்த சூழலில், கொரோனா தொற்றை வேகமாக கண்டுபிடிக்க பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. ஏற்கெனவே அமெரிக்கா, தென்கொரியாவை சேர்ந்த நிறுவனங்கள் 15 நிமிடம், 30 நிமிடங்களில் கொரோனாவை கண்டறிவதற்கான கருவிகளை உருவாக்கி பரிசோதித்து வருகின்றன.

இந்நிலையில், இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஐந்து நிமிடத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனை முறையை உருவாக்கியுள்ளனர். இதை தொழில் நிறுவனங்கள், விமான நிலையங்கள் என பல இடங்களில் பயன்படுத்தலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி