ஆப்நகரம்

அமெரிக்காவிடமே இழப்பீடு கேட்டு சேட்டை செய்யும் பாகிஸ்தான்!!

அமெரிக்க அரசு, தங்களுக்கு வழங்கியது நிதியுதவி இல்லையென்றும், அமெரிக்கா எங்களுக்கு இழப்பீடு தரவேண்டியுள்ளது எனவும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Sep 2018, 1:55 pm
அமெரிக்க அரசு, தங்களுக்கு வழங்கியது நிதியுதவி இல்லையென்றும், அமெரிக்கா எங்களுக்கு இழப்பீடு தரவேண்டியுள்ளது எனவும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil அமெரிக்காவிடமே இழப்பீடு கேட்டு சேட்டை செய்யும் பாகிஸ்தான்!!
அமெரிக்காவிடமே இழப்பீடு கேட்டு சேட்டை செய்யும் பாகிஸ்தான்!!


உலகின் வல்லரசு நாடாகவும், முதன்மையான நாடாகவும் திகழ்வது அமெரிக்கா. இது, தீவிரவாதத்தை ஒழிக்க, கடந்த காலங்களில் ஈரான், ஈராக் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் போர் புரிந்துள்ளது. மேலும், தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக குறிப்பிட்ட சில நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

அந்த வகையில், தீவிரவாதம் தலைவிரித்தாடும் பாகிஸ்தானிலும், அமெரிக்கா தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. மேலும், தீவிரவாத அமைப்புகளை அழிக்க உதவும் வகையில், ஆண்டுதோறும் சுமார் 300 மில்லியன் டாலர்களை வழங்கி வந்தது.கடந்த ஜனவரி மாதம், அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வரும் நிதியுதவி நிறுத்தப்படுவதாக தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து, அந்த நிதியை மீண்டும் அளிக்கும்படி பாகிஸ்தான் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், பாகிஸ்தானுக்கு ஏன் நிதியுதவி செய்ய விரும்பவில்லை என அமெரிக்கா அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. அதில், தீவிரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் பாரபட்சமாக செயல்படுவதாகவும், பாகிஸ்தானின் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் தங்களுக்குத் திருப்தி இல்லை எனவும் கூறியது.

இந்நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கைக் குறித்துப் பதிலளித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்எம் குரேஷி, “300 மில்லியன் டாலர் எங்களுக்கு உதவியாக அளிக்கப்படவில்லை. இரு நாடுகளும் இணைந்து தீவிரவாதத்தை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டது. இதற்கு நாங்கள் எங்கள் நிதியையே பயன்படுத்தியுள்ளோம். அதற்கு அமெரிக்கா இன்னும் இழப்பீடு தரவேண்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி