ஆப்நகரம்

உரி தாக்குதல்: இந்தியா மீது பாக்., ஊடகங்கள் குற்றச்சாட்டு

உரி தாக்குதல் தொடர்பாக இந்தியா மீது பாகிஸ்தான் ஊடகங்கள் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளன.

TNN 21 Sep 2016, 1:57 am
இஸ்லாமாபாத்: உரி தாக்குதல் தொடர்பாக இந்தியா மீது பாகிஸ்தான் ஊடகங்கள் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளன.
Samayam Tamil pak media blames india on uri attack
உரி தாக்குதல்: இந்தியா மீது பாக்., ஊடகங்கள் குற்றச்சாட்டு


ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் சதிச் செயல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உரி தாக்குதல் தொடர்பாக இந்தியா மீது பாகிஸ்தான் ஊடகங்கள் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளன.

சீக்கியர்கள் - முஸ்லீம்கள் இடையே வெறுப்பை வளர்க்க உரி தாக்குதல் இந்தியாவால் திட்டமிடப்பட்டது தான் உரி தாக்குதல். காஷ்மீரில் சுதந்திரம் கேட்டு போராடும் முஸ்லிம்களுக்கு சீக்கியர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்து தலைவர்கள் ஆட்சியில் தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சீக்கியர்களும் கருதுகின்றனர். இந்த தாக்குதல் மூலம் பல பலன்களை அடைய இந்தியா நினைக்கிறது என பாகிஸ்தான் ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளது.

அடுத்த செய்தி