ஆப்நகரம்

பாகிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இருப்பதாக பாகிஸ்தான் ஒப்புதல்..!

பாகிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இருப்பதாகவும்,ஆனால் அந்த அமைப்புகளின் நடவடிக்கைகளை கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

TNN 2 Sep 2016, 1:03 am
பாகிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இருப்பதாகவும்,ஆனால் அந்த அமைப்புகளின் நடவடிக்கைகளை கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil pak spoke person agreed isis activities in pakistan
பாகிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இருப்பதாக பாகிஸ்தான் ஒப்புதல்..!


ஏற்கனவே தாலிபன் தீவிரவாதிகளின் தாக்குதல்களினால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வரும் பாகிஸ்தானில்,சமீபகாலமாக ஐ.எஸ் தீவிரவாதிகளின் கை ஓங்கியுள்ளது.பாகிஸ்தானில் தங்கள் அமைப்பை வளர்த்து வரும் ஐ.எஸ் அமைப்பு,அந்நாட்டில் பல்வேறு தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.சமீபத்தில் குவெட்டா பகுதியில் நடைபெற்ற தாக்குதலுக்கும் ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.

ஆனால் தங்கள் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் இல்லை என தொடர்ந்து அந்நாடு கூறி வந்தது.இந்நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர்,இதுவரை 300-க்கும் மேற்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாகவும்,இதில் அந்த அமைப்பின் முக்கிய தளபதியும் அடங்குவான் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தானின் ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் இருப்பது உண்மைதான் எனவும் ஆனால் தொடர் நடவடிக்கைகள் மூலம் அவர்களை கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி