ஆப்நகரம்

பாகிஸ்தான் அத்துமீறலால் 2 இந்திய வீரர்கள் வீரமரணம்!

எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறியதைத் தொடர்ந்து இரண்டு இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

Samayam Tamil 1 Oct 2020, 7:28 pm

இன்று காலையில் வடக்கு காஷ்மீரின் நவுகாம் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியதால் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாகவும், நான்கு வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil LOC India


எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி மோதலை தொடங்கியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. காயமடைந்த வீரர்கள் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சேட்டையை அடக்க இந்திய ராணுவம் ரெடி!

இதுபற்றி இந்திய ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் ராஜேஷ் கலியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவுகாம், குப்வாரா பகுதியில் சிறு பீரங்கி மற்றும் இதர ஆயுதங்களால் துப்பாக்கிச்சூடு நடத்தி பாகிஸ்தான் அத்துமீறியுள்ளது. இதனால் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

நான்கு வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஹவல்தார் குல்தீப், சுபம் ஆகிய இரண்டு வீரர்களும் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த மாதம் பாகிஸ்தான் பல்வேறு தருணங்களில் எல்லையில் அத்துமீறியுள்ளது. முக்கியமாக, வடக்கு காஷ்மீரில் பாகிஸ்தான் அதிகம் அத்துமீறியுள்ளதாக ராணுவ வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இந்திய ராணுவம் முழு வீச்சில் பதிலடி கொடுத்து வருகிறது.

அடுத்த செய்தி