பாகிஸ்தான் ஆக்மிரப்பு காஷ்மீரில் அணை கட்டும் பாகிஸ்தான்: சீனா நிதியுதவி!!
சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தஸ் ஆற்றில் 3 அணைகளை பாகிஸ்தான் கட்டி வருவதாக வெளிவிவகாரத்துறைக்கான இணை அமைச்சர் வி.கே. சிங் மாநிலங்களவையில் அளித்த எழுத்துபூர்வ விளக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்த விளக்கத்தில், ''இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்று பீஜிங் மற்றும் இஸ்லாமாபாத்துக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் அணைகள் கட்டுவது இந்திய இன்றையாண்மைக்கு எதிரானது என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் எங்களது அரசியல் நிலைப்பாட்டை பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் தெளிவுபடுத்தியுள்ளோம். இது தொடரும்'' என்று தெரிவித்துள்ளார்.
சீன நிதியுதவியில் இந்த அணைகளை பாகிஸ்தான் கட்டி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தஸ் ஆற்றில் 3 அணைகளை பாகிஸ்தான் கட்டி வருவதாக வெளிவிவகாரத்துறைக்கான இணை அமைச்சர் வி.கே. சிங் மாநிலங்களவையில் அளித்த எழுத்துபூர்வ விளக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்த விளக்கத்தில், ''இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்று பீஜிங் மற்றும் இஸ்லாமாபாத்துக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் அணைகள் கட்டுவது இந்திய இன்றையாண்மைக்கு எதிரானது என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் எங்களது அரசியல் நிலைப்பாட்டை பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் தெளிவுபடுத்தியுள்ளோம். இது தொடரும்'' என்று தெரிவித்துள்ளார்.
சீன நிதியுதவியில் இந்த அணைகளை பாகிஸ்தான் கட்டி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.