ஆப்நகரம்

ஐ.நா.வில் பொய்யான புகைப்படத்தை காட்டி மாட்டிக்கொண்ட பாகிஸ்தான்

ஐக்கிய நாடுகள் சபையில், காஷ்மீாில் எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் தூதா் மல்லிகா லோகி காட்டிய புகைப்படம் பொய்யானது என்று தொியவந்துள்ளது.

TOI Contributor 24 Sep 2017, 8:06 pm
ஐக்கிய நாடுகள் சபையில், காஷ்மீாில் எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் தூதா் மல்லிகா லோகி காட்டிய புகைப்படம் பொய்யானது என்று தொியவந்துள்ளது.
Samayam Tamil pakistan diplomat goofs up at un tries to pass off image of gaza teen as kashmir girl
ஐ.நா.வில் பொய்யான புகைப்படத்தை காட்டி மாட்டிக்கொண்ட பாகிஸ்தான்


ஐ.நா. சபையின் 72வது பொதுக் கூட்டம் நியூயாா்க் நகாில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு உலக நடப்புகள் குறித்து கருத்து தொிவித்து வருகின்றன. இதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தான் தீவிரவாதத்தை வளா்ப்பதாக குற்றம் சாட்டினாா். மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு கருத்துகளை தொிவித்தாா்.

சுஷ்மாவின் உரைக்கு இந்தியாவைச் சோ்ந்த பல்வேறு தலைவா்கள் தங்களது பாராட்டுகளை தொிவித்து வருகின்றனா். சுஷ்மாவின் கருத்துக்கு பதில் தரும் விதமாக பாகிஸ்தானின் ஐ.நா. தூதா் மல்லிகா லோகி சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா்.

அவா் தனது உரையின் போது இந்தியாவை தெற்காசிய பயங்கரவாதத்தின் தாயகம் என்று விமா்சித்தாா். அத்துடன் காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் பெல்லட் குண்டு தாக்குதலுக்குள்ளான பெண்ணின் புகைப்படம் என ஒரு புகைப்படத்தையும் காட்டினார். ஆனால் அந்த புகைப்படம் உண்மையில் 2014-ல் பாலஸ்தீனத்தின் காஸாவில் எடுக்கப்பட்டதாகும்.

பத்திாிகையாளா் ஒருவா் எடுத்திருந்த அப்படத்தை கார்டியன் ஏடு வெளியிட்டிருந்தது. 3 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அந்த படத்தை காஷ்மீரில் எடுத்தது என பொய் சொன்ன பாகிஸ்தானுக்கு சமூக வலைதளங்களில் இருந்து பல்வேறு கருத்துகள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், மிகவும் பிரபலமான புகைப்படம் ஒன்றை ஐ.நா.வில் பொய்யாக பயன்படுத்தியதன் மூலம் உலக நாடுகள் மத்தியில் பாகிஸ்தான் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

அடுத்த செய்தி