மதராசா கொடூர குண்டுவெடிப்பில் கொத்து கொத்தாக பலி!
பாகிஸ்தானில் மதராசா பள்ளியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 27 Oct 2020, 6:02 pm
பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் இன்று ஏற்பட்ட குண்டுவெடிப்பு ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
பாகிஸ்தானின் பழம்பெரும் நகரான பெஷாவரில் டிர் காலனியில் உள்ள மதராசா பள்ளியில் இன்று சக்திவாய்ந்த குண்டுவெடித்ததில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர், சுமார் 70 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குண்டுவெடிப்பு நடைபெற்ற மதராசாவில் அடையாளம் தெரியாத நபர்கள் பிளாஸ்டிக் பையில் குண்டுவைத்துள்ளதாக பெஷாவர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கை அளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து சோதனை!
பாதிக்கப்பட்டவர்கள் லேடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் உயிரிழந்த நிலையிலும், 70 பேர் படுகாயமடைந்த நிலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் நான்கு பேர் குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவலையும் மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பு நடைபெற்ற மதராசாவில் பெரும்பாலும் வயது வந்த மாணவர்களே பயில்வதாக கூறப்படுகிறது.
குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது பல மாணவர்கள் அங்கே படித்துக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் ஐஈடி கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், ஐந்து கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பு நடைபெற்றபோது புனித குரான் பற்றி வகுப்பு நடைபெற்றதாகவும், அந்த நேரத்தில் யாரோ வெடிபொருட்கள் அடங்கிய பிளாஸ்டிக் பையை உள்ளே எடுத்துச்சென்றுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பழம்பெரும் நகரான பெஷாவரில் டிர் காலனியில் உள்ள மதராசா பள்ளியில் இன்று சக்திவாய்ந்த குண்டுவெடித்ததில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர், சுமார் 70 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குண்டுவெடிப்பு நடைபெற்ற மதராசாவில் அடையாளம் தெரியாத நபர்கள் பிளாஸ்டிக் பையில் குண்டுவைத்துள்ளதாக பெஷாவர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கை அளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து சோதனை!
பாதிக்கப்பட்டவர்கள் லேடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் உயிரிழந்த நிலையிலும், 70 பேர் படுகாயமடைந்த நிலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் நான்கு பேர் குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவலையும் மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பு நடைபெற்ற மதராசாவில் பெரும்பாலும் வயது வந்த மாணவர்களே பயில்வதாக கூறப்படுகிறது.
குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது பல மாணவர்கள் அங்கே படித்துக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் ஐஈடி கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், ஐந்து கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பு நடைபெற்றபோது புனித குரான் பற்றி வகுப்பு நடைபெற்றதாகவும், அந்த நேரத்தில் யாரோ வெடிபொருட்கள் அடங்கிய பிளாஸ்டிக் பையை உள்ளே எடுத்துச்சென்றுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.