ஆப்நகரம்

பாகிஸ்தானில் கன மழை: 53 பேர் பலி

கைபர் பக்துங்வா மாகாணம், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் பெருக்கில் சிக்கி 53 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 4 Apr 2016, 11:52 am
இஸ்லாமாபாத்: கைபர் பக்துங்வா மாகாணம், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் பெருக்கில் சிக்கி 53 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil pakistan floods kill at least 53 after heavy rains
பாகிஸ்தானில் கன மழை: 53 பேர் பலி


பருவ மழைக்கு முன்னதாக பெய்யும் மழை பொதுவாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அதிலும் கோடை மழை இன்னும் மோசமானது. ஆகையால் கிராம புறங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு பாகிஸ்தான் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது பாகிஸ்தானில் பெய்த கன மழையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வெள்ள நீரில் மூழ்கியும், நிலச்சரிவிலும் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மேலாண்மை பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களும் அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி