பாகிஸ்தான் மக்கள் கட்சி பிரமுகரான ஃபர்ஹகத்துல்லா பாபர் என்பவர், தமது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தேதி குறிப்பிடப்படாத அந்த பதிவில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஃபர்வேஸ் முஷாரஃப்பின் பேட்டி இடம்பெற்றுள்ளது.
அந்த பேட்டியில் முஷாரஃப் கூறியிருக்கும் கருத்துகள், 'பயங்கரவாதத்தின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது' என்ற இந்தியாவின் தொடர் குற்றச்சாட்டை நிரூபிக்கும் விதத்தில் உள்ளது.
அவர் தனது பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷியப் படைகளை வெளியேற்ற, கடந்த 1979 -இல், மதரீதியிலான தீவிரவாதத்தை அறிமும் செய்தோம். புனிதப் போர் (ஹிகாத்) என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த முயற்சியில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முஜாஹிதீன்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
அவர்களை பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்று போர் பயிற்சிகளை கொடுத்ததுடன், ஆயுதங்களை அளித்தோம். அவர்கள் அனைவரும் எங்களது ஹீரோக்கள். ஒசாமா பின்லேடன், ஹக்கானி ஆகியோர் அவர்களில் சில டாப் -ஹீரோக்கள்.
குல்பூஷன் ஜாதவுக்காக பாகிஸ்தான் ராணுவச் சட்டத்தில் மாற்றமா?
இவர்களை போன்றே, இந்திய ராணுவத்துக்கு எதிராக போரிட காஷ்மீரிகளுக்கும் பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்குப் பின் அவர்கள், லஷ்கர் -இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து, இந்திய ராணுவத்துக்கு எதிராக போரிட்டனர். எனவே, காஷ்மீரிகளும் எங்களின் ஹீரோக்களே என்று பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது .ஆனால், ஜம்மு -காஷ்மீரில் நடைபெற்று வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும், தங்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று பாகிஸ்தானும் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த நிலையில், பர்வேஸ் முஷாரஃப்பின் இந்தக் கருத்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பேட்டியில் முஷாரஃப் கூறியிருக்கும் கருத்துகள், 'பயங்கரவாதத்தின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது' என்ற இந்தியாவின் தொடர் குற்றச்சாட்டை நிரூபிக்கும் விதத்தில் உள்ளது.
அவர் தனது பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷியப் படைகளை வெளியேற்ற, கடந்த 1979 -இல், மதரீதியிலான தீவிரவாதத்தை அறிமும் செய்தோம். புனிதப் போர் (ஹிகாத்) என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த முயற்சியில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முஜாஹிதீன்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
அவர்களை பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்று போர் பயிற்சிகளை கொடுத்ததுடன், ஆயுதங்களை அளித்தோம். அவர்கள் அனைவரும் எங்களது ஹீரோக்கள். ஒசாமா பின்லேடன், ஹக்கானி ஆகியோர் அவர்களில் சில டாப் -ஹீரோக்கள்.
குல்பூஷன் ஜாதவுக்காக பாகிஸ்தான் ராணுவச் சட்டத்தில் மாற்றமா?
இவர்களை போன்றே, இந்திய ராணுவத்துக்கு எதிராக போரிட காஷ்மீரிகளுக்கும் பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்குப் பின் அவர்கள், லஷ்கர் -இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து, இந்திய ராணுவத்துக்கு எதிராக போரிட்டனர். எனவே, காஷ்மீரிகளும் எங்களின் ஹீரோக்களே என்று பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது .ஆனால், ஜம்மு -காஷ்மீரில் நடைபெற்று வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும், தங்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று பாகிஸ்தானும் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த நிலையில், பர்வேஸ் முஷாரஃப்பின் இந்தக் கருத்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.