ஆப்நகரம்

டிக் டாக் மீதான தடை நீக்கம்: எங்கு தெரியுமா?

டிக் டாக் நிறுவனம் உறுதிமொழி அளித்ததால் அதன் தடை நீக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Oct 2020, 6:58 am
உலகளவில் மக்களை கவர்ந்துள்ள ஆப்களில் டிக் டாக் முக்கியமான ஒன்று. பாமரர் முதல் சர்வதேச பிரபலங்கள் வரை பயன்படுத்தும் இந்த ஆப் சீன நிறுவனத்துக்கு சொந்தமானது.
Samayam Tamil tiktok


இந்தியா சீனா எல்லைப் பிரச்சினை எழுந்தபோது சீனாவைச் சேர்ந்த பல்வேறு ஆப்களை இந்தியா தடை செய்தது. அதில் டிக் டாக்கும் ஒன்று.

அமெரிக்காவிலும் இந்த ஆப் தடை செய்யப்பட்டது. டிக் டாக் நிறுவனம் தனது தரவுகளை சீன அரசுடன் பகிர்ந்துகொள்கிறது என அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது. ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டை டிக் டாக் நிறுவனம் மறுத்தது.

சீனாவில் மீண்டும் கொரோனா: அதிர்ச்சியளிக்கும் செய்தி!

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் டிக் டாக்கை தடை செய்ய அரசியல் ரீதியான காரணங்கள் இருந்த நிலையில் பாகிஸ்தானில் ஒழுக்ககேடு, ஆபாசம் ஆகிய காரணங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த காரணங்கள் இந்தியாவிலும் இதற்கு முன்பாக எழுப்பப்பட்டன. டிக் டாக்கை பெரும்பாலானோர் பொழுதுபோக்காக பயன்படுத்தும் நிலையில் பலர் ஆபாசமான வீடியோக்களை வெளியிடவும் செய்தனர். ஒரே நேரத்தில் பல லட்சம் பேருக்கு இந்த வீடியோக்கள் செல்வதால் இதை தடை செய்ய வேண்டும் என கூறப்பட்டது.

ஹேப்பி நியூஸ்: இலவச வைபை வசதி பெற இதை செய்தால் போதும்!

பாகிஸ்தானிலும் இந்தப் புகார்கள் எழுந்த நிலையில் தடை செய்யப்பட்டது. ஆனால் தற்போது டிக் டாக் நிறுவவனம் அளித்துள்ள உறுதிமொழி காரணமாக பாகிஸ்தான் அரசு தடையை நீக்கியுள்ளது.

பாகிஸ்தானின் தொலை தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஆபாசத்தையும், ஒழுக்க கேட்டையும் மீண்டும் மீண்டும் பரப்பும் கணக்குகளை நீக்குவதாக அளிக்கப்பட்ட உறுதிமொழியைத் தொடர்ந்து டிக்டாக் மீதான தடையை நீக்க முடிவு செய்யப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி