ஆப்நகரம்

அடிச்சாலும், புடிச்சாலும் அண்ணன்-தம்பிடா; 298 இந்தியர்களுக்கு குடியுரிமை அளித்த பாகிஸ்தான்...!

கடந்த 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் குடியுரிமை வழங்கியுள்ளது.

TNN 20 Aug 2017, 3:04 pm
இஸ்லாமாபாத்: கடந்த 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் குடியுரிமை வழங்கியுள்ளது.
Samayam Tamil pakistan grants nationality to 298 indians
அடிச்சாலும், புடிச்சாலும் அண்ணன்-தம்பிடா; 298 இந்தியர்களுக்கு குடியுரிமை அளித்த பாகிஸ்தான்...!


பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் ஷேக் ரோஹைல் அஷ்கார், கடந்த 2012ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தஞ்சம் புகுந்த 48 பேருக்கு பாகிஸ்தான் நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டது.

இந்த எண்ணிக்கை 2013ல் 75ஆகவும், 2014ல் 76ஆகவும் அதிகரித்துள்ளது. இதையடுத்து 2015ல் 15 பேராக எண்ணிக்கை குறைந்தது. 2016ல் 69 பேருக்கும், நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் வரை 15 பேருக்கும் குடியுரிமை வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் குடியுரிமை பெறுவது மிகவும் சிக்கலான விஷயம். அங்கு இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பர்மா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு, பாகிஸ்தான் நாட்டு கணவரின் இழப்பால் தவித்து வந்த இந்தியப் பெண்ணிற்கு, அந்நாட்டு உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கான் உத்தரவுப்படி குடியுரிமை வழங்கப்பட்டது.

ஆனால் அவருடைய குடியுரிமைக்கான விண்ணப்பம் 2008ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Pakistan grants nationality to 298 Indians in 5 years: Ministry.

அடுத்த செய்தி