போலியோ அடையாள மையை நம் நாட்டிலிருந்து இறக்குமதி செய்துக் கொள்ள 'பங்காளி' நாடான பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலியோ எனும் இளம்பிள்ளை வாதத்தை ஒழிக்க, உலக சுகாதார நிறுவனத்தின் உதவியோடு, உலக நாடுகள் முழுவதும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
முகாம்கள் மூலம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கப்பட்டதை உறுதி செய்ய, அவர்களின் இடது ஆள்காட்டி விரலில் அடையாள மை வைக்கப்படுகிறது. இதற்காக சிறப்பு "மார்க்கர்" பயன்படுத்தப்படுகிறது.
பாகிஸ்தானில் நடத்தப்பட்டுவரும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களில் பயன்படுத்துவதற்காக, 8 லட்சம் மார்க்கர்களை இந்தியாவிடம் வாங்க, உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்திருந்தது.
ஐ.நா. சபையின் கௌரவப் பட்டத்தைப் பெற்ற மலாலா
இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததால், நம் நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு தடை விதித்தது.
இந்த தடை உத்தரவால், உயிர்காக்கும் மருந்துகளுக்கு பாகிஸ்தானில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்தியாவில் இருந்து உயிர்காக்கும் மருந்துகளையும், அதன் மூலப்பொருட்களையும் இறக்குமதி செய்ய, செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தது.
எங்க தல உயிரோட தான் இருக்காரு ... அடித்துச் சொல்லும் மைக்கேல் ஜாக்சன் ரசிகர்கள்!!
இதையடுத்து, உலக சுகாதார அமைப்பு ஏற்கெனவே திட்டமிட்டபடி, இந்தியாவில் இருந்து 8 லட்சம் மார்க்கர்களை (போலியோ அடையாள மை) இறக்குமதி செய்துகொள்ள பாகிஸ்தான் தற்போது அனுமதி அளித்துள்ளது.
பல ஆண்டுகளாக தொடர் முகாம்கள் நடத்தி வருவதன் பயனாக, போலியோ இல்லாத நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
போலியோ எனும் இளம்பிள்ளை வாதத்தை ஒழிக்க, உலக சுகாதார நிறுவனத்தின் உதவியோடு, உலக நாடுகள் முழுவதும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
முகாம்கள் மூலம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கப்பட்டதை உறுதி செய்ய, அவர்களின் இடது ஆள்காட்டி விரலில் அடையாள மை வைக்கப்படுகிறது. இதற்காக சிறப்பு "மார்க்கர்" பயன்படுத்தப்படுகிறது.
பாகிஸ்தானில் நடத்தப்பட்டுவரும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களில் பயன்படுத்துவதற்காக, 8 லட்சம் மார்க்கர்களை இந்தியாவிடம் வாங்க, உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்திருந்தது.
ஐ.நா. சபையின் கௌரவப் பட்டத்தைப் பெற்ற மலாலா
இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததால், நம் நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு தடை விதித்தது.
இந்த தடை உத்தரவால், உயிர்காக்கும் மருந்துகளுக்கு பாகிஸ்தானில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்தியாவில் இருந்து உயிர்காக்கும் மருந்துகளையும், அதன் மூலப்பொருட்களையும் இறக்குமதி செய்ய, செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தது.
எங்க தல உயிரோட தான் இருக்காரு ... அடித்துச் சொல்லும் மைக்கேல் ஜாக்சன் ரசிகர்கள்!!
இதையடுத்து, உலக சுகாதார அமைப்பு ஏற்கெனவே திட்டமிட்டபடி, இந்தியாவில் இருந்து 8 லட்சம் மார்க்கர்களை (போலியோ அடையாள மை) இறக்குமதி செய்துகொள்ள பாகிஸ்தான் தற்போது அனுமதி அளித்துள்ளது.
பல ஆண்டுகளாக தொடர் முகாம்கள் நடத்தி வருவதன் பயனாக, போலியோ இல்லாத நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.