ஆப்நகரம்

குவைத் ஷேக் பர்சை களவாடிய பாகிஸ்தான் அதிகாரி; அசிங்கப்பட்டு கைதான சம்பவம்!

இஸ்லாமாபாத்: ஷேக் ஒருவரின் பாகிஸ்தான் அதிகாரி திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 Oct 2018, 10:48 pm
குவைத் நாட்டைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இருநாடுகளுக்கு இடையே வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டது.
Samayam Tamil Haider Khan


இதுதொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் இருநாட்டு அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்நிலையில் கூட்டம் நிறைவு பெற்ற பின், குவைத் ஷேக் ஒருவர் தனது பர்சை மறந்து சென்று விட்டார். அந்த பர்சில் ஏராளமான குவைத் தினார்கள் இருந்துள்ளன.

இதைக் கண்ட பாகிஸ்தான் அரசு இணைச் செயலாளர் ஹைதர் கான், பர்சை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். இதையடுத்து தனது பர்சை காணவில்லை என்று குவைத் ஷேக் புகார் அளித்துள்ளார்.

பின்னர் கூட்டம் நடந்த போது இருந்த ஊழியர்கள் அனைவரிடமும் விசாரிக்கப்பட்டது. ஆனால் பர்சை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் சிசிடிவியில் பார்க்கும் போது, அதிகாரி ஹைதர் கான் வசமாக சிக்கிக் கொண்டார். அவர் மீது புகார் அளிக்கப்பட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Pakistan Officer arrested for stolen Kuwait Sheikh Purse.

அடுத்த செய்தி