ஆப்நகரம்

நாசமான இந்து கோயில்: பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு!

இந்து கோயில் இடிப்பு வழக்கில் 30க்கும் மேற்பட்டோரை பாகிஸ்தான் போலீஸ் கைது செய்துள்ளது.

Samayam Tamil 1 Jan 2021, 4:50 pm
பாகிஸ்தானில் உள்ள இந்துக் கோயில் பல நூற்றுக்கணக்கானவர்களால் சூறையாடப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டது சிறுபான்மை மக்களான இந்துக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
Samayam Tamil Pakistan hindu temple


பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தேரி என்ற கிராமத்தில் 1920ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்துக் கோயில் இருக்கிறது. இதை தீவிரவாத கட்சியால் ஈர்க்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் அடங்கிய கும்பல் சூறையாடியுள்ளது.

அடேங்கப்பா! தங்கத்தில் செஞ்ச பர்கரா; விலை எவ்வளவு தெரியுமா?
இதை எதிர்த்து பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் அனைவரையும் கைதுசெய்யும்படி மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சேதப்படுத்தப்பட்ட கோயிலை மீண்டும் கட்டுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்தாக்குதலில் சம்பந்தப்பட்ட 30க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதில், ஜேமியாத் உலெமா ஈ-இஸ்லாம் கட்சி தலைவர் ரெஹ்மத் சலாம் கத்தக்கும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கட்சியின் தூண்டுதலால்தான் கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டதா அகூறப்படுகிறது.

மாஸ்டருக்காக மட்டும் விஜய் என்னை சந்திக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி
முதல் தகவல் அறிக்கையில் 350க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மாகாண போலீஸ் தலைவர் கே.பி.கே. சனவுல்லா அப்பாசி தெரிவித்துள்ளார். தீவிரவாதம் தொடர்பான சட்டங்களும் முதல் தகவல் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க போலீஸ் நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி