புதுடெல்லி: வரும் 11ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கான், விழாவை எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக பேசிய பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் செய்தித் தொடர்பாளர், பதவியேற்பு விழாவிற்கு எந்தவொரு வெளிநாட்டு தலைவர்களையும் அழைக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஒரு தேசிய நிகழ்வு.
இம்ரான் கானுக்கு மிக நெருங்கிய ஒரு சில நண்பர்கள் மட்டும் கலந்து கொள்வர் என்றார். முன்னதாக சித்து, கவாஸ்கர், கபில் தேவ் உள்ளிட்டோரை விழாவிற்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பதிலளித்த சித்து, இது ஒரு தனிப்பட்ட அழைப்பு மற்றும் இதில் பங்கேற்பது கௌரவமானதும் கூட என்று கூறினார்.
இருப்பினும் ஏற்கனவே விடுக்கப்பட்ட அழைப்புகளில் மாற்றம் இருக்கிறதா என்ற அறிவிப்புகள் ஏதும் இல்லை. அதேசமயம் தி எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் கூறுகையில், கான் தனது வெளிநாட்டு நண்பர்களை அழைக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
டான் வெளியிட்டுள்ள செய்தியில், இம்ரான் கானில் நீண்ட கால கனவு விரைவில் நிறைவேற இருக்கிறது. இதற்கான விழாவில் பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்களை அழைக்க திட்டமிடப்பட்டது. அதில் பிரதமர் மோடி, அமீர் கான், கபில் தேவ், கவாஸ்கர், சித்து உள்ளிட்டோரின் பெயர்கள் அடங்கும்.
இந்த சூழலில் ஆடம்பர விழாவை கான் தவிர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை 25ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
Pakistan PM-elect Imran Khan to not invite foreign dignitaries for oath taking ceremony.
இம்ரான் கானுக்கு மிக நெருங்கிய ஒரு சில நண்பர்கள் மட்டும் கலந்து கொள்வர் என்றார். முன்னதாக சித்து, கவாஸ்கர், கபில் தேவ் உள்ளிட்டோரை விழாவிற்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பதிலளித்த சித்து, இது ஒரு தனிப்பட்ட அழைப்பு மற்றும் இதில் பங்கேற்பது கௌரவமானதும் கூட என்று கூறினார்.
இருப்பினும் ஏற்கனவே விடுக்கப்பட்ட அழைப்புகளில் மாற்றம் இருக்கிறதா என்ற அறிவிப்புகள் ஏதும் இல்லை. அதேசமயம் தி எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் கூறுகையில், கான் தனது வெளிநாட்டு நண்பர்களை அழைக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
டான் வெளியிட்டுள்ள செய்தியில், இம்ரான் கானில் நீண்ட கால கனவு விரைவில் நிறைவேற இருக்கிறது. இதற்கான விழாவில் பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்களை அழைக்க திட்டமிடப்பட்டது. அதில் பிரதமர் மோடி, அமீர் கான், கபில் தேவ், கவாஸ்கர், சித்து உள்ளிட்டோரின் பெயர்கள் அடங்கும்.
இந்த சூழலில் ஆடம்பர விழாவை கான் தவிர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை 25ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
Pakistan PM-elect Imran Khan to not invite foreign dignitaries for oath taking ceremony.