ஆப்நகரம்

வாங்க இந்த மாசமே கட்டிப் புடிக்கலாம்; மோடியை அழைக்கும் இம்ரான் கான்!

இருதரப்பு நல்லுறவு பேணுவது குறித்து, மோடிக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.

Samayam Tamil 20 Sep 2018, 2:42 pm
இஸ்லாமாபாத்: இருதரப்பு நல்லுறவு பேணுவது குறித்து, மோடிக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
Samayam Tamil Modi


அமெரிக்காவின் நியூயார்க்கில் இம்மாதம் ஐ.நா சபை பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமதி குரேஷி கலந்து கொள்கின்றனர்.

அப்போது இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடிக்கு, இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

முன்னதாக பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற போது, இம்ரான் கானுக்கு மோடி கடிதம் எழுதினார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய இம்ரான் கான், இருதரப்பு நல்லுறவு பேண இந்தியா ஒரு அடி எடுத்து வைத்தால், பாகிஸ்தான் இரண்டு அடிகள் எடுத்து வைக்கும் என்றார்.

இந்த சூழலில் தற்போது முதல் முறையாக மோடிக்கு, இம்ரான் கான் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அழைப்பது நல்லெண்ண நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

அதுவும் இம்மாதமே பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை சுமூகமாக சென்றால், இந்தியா - பாகிஸ்தான் இடையே புதிய அத்தியாயம் தொடங்கும் என்று கருதலாம்.

Pakistan PM Imran Khan writes a letter to PM Modi for mutual relationship.

அடுத்த செய்தி