ஆப்நகரம்

நாடு திரும்பினார் பாக்., பிரதமர்

லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்து வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்பினார்.

TNN 9 Jul 2016, 9:31 pm
இஸ்லாமாபாத்: லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்து வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்பினார்.
Samayam Tamil pakistan pm returns home after surgery in london
நாடு திரும்பினார் பாக்., பிரதமர்


பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் (66). இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த மே மாதம் 31-ம் தேதியன்று அவருக்கு லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதியன்று அவர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த அவர், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

Much awaited homecoming ...... Shukar Alhamdolillah! pic.twitter.com/XlAT45f5jk— Maryam Nawaz Sharif (@MaryamNSharif) July 9, 2016

லண்டன் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த அலுவலகத்தில் இருந்தவாறே அரசு பணிகளை மேற்கொண்டு வந்த அவர், ரம்ஜான் பண்டிகையை அங்கு கொண்டாடினார். இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்பினார்.

அடுத்த செய்தி