ஆப்நகரம்

மிருகங்கள்போல நடத்தப்படும் பாக்., சிறைக் கைதிகள்

பாகிஸ்தானின் சிந்த் சிறையில் அளவுக்கு அதிகமாக கைதிகள் இருந்தால் கை விலங்குகள் போதாது. அப்போது கைதிகளின் கைகளைப் பிணைக்க இரும்பு சங்கிலிகள் பயன்படுத்தப்படும். சங்கிலிகளை இறுக்கமாகக் கட்டாமல் தளர்வாக கட்ட கைதிகள் காவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்.

Samayam Tamil 28 Feb 2019, 5:14 pm
பாகிஸ்தானின் சிந்த் சிறையில் அளவுக்கு அதிகமாக கைதிகள் இருந்தால் கை விலங்குகள் போதாது. அப்போது கைதிகளின் கைகளைப் பிணைக்க இரும்பு சங்கிலிகள் பயன்படுத்தப்படும். பல மணி நேரம் இந்த சங்கிலிகள் கட்டப்பட்டு அவர்கள் போலீஸாரால் மூர்க்கமாக இழுத்துச் செல்லப்பட்டால் அவர்களது கைகளில் வலி ஏற்படும். இதனால் காயம் ஏற்படுகிறது.
Samayam Tamil ffsfsd


சங்கிலிகளை இறுக்கமாகக் கட்டாமல் தளர்வாக கட்ட கைதிகள் காவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். கைதிகளை மிருகங்கள் போல சங்கிலி கட்டி இழுத்துச் செல்வது மனித உரிமை மீறல். இதற்கு பல மனித் உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இவ்வாறு செய்த ஓர் பாக்., காவல் ஆய்வாளர் தேடப்பட்டு வருகிறார். இதுகுறித்து மற்றொரு காவலரான ரசாவிடம் கேட்டபோது அவர் இக்குற்றச்சாட்டினை மறுத்துள்ளார்.

சிறையில் கைதிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என சில கட்டுப்பாடுகள், விதிகள் உண்டு. இதனை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும். ஆனால் சிந்த் மாகாண சிறைத்துறை சிறப்பு செயலாளர் அப்துல் வஹாப் மேமோன் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பொறுப்பற்ற பதிலைத் அளித்துள்ளார். இது கண்டனத்துக்குள்ளாகி உள்ளது.

அடுத்த செய்தி