ஆப்நகரம்

இந்திய மீனவர்கள் 26 பேரை விடுதலை செய்தது பாகிஸ்தான்

கராச்சி: சிறைபிடித்திருந்த இந்திய மீனவர்களில் 26 பேரை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது.

Samayam Tamil 13 Aug 2018, 3:41 am
கராச்சி: சிறைபிடித்திருந்த இந்திய மீனவர்களில் 26 பேரை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது.
Samayam Tamil 54aa5c1692806


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் கடற்படை கைது செய்து கராச்சி சிறையில் அடைத்தது. அவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறனர்.

கனாட் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து லாகூர் வழியாக அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கராச்சியைச் சேர்ந்த இதி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் இந்திய மீனவர்கள் நாடு திரும்புவதற்கான செலவை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி