ஆப்நகரம்

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல்: 18 பேர் பலி

பாகிஸ்தான் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 18 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 6 Oct 2017, 12:49 am
பாகிஸ்தான் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 18 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil pakistan suicide attack kills 18 amid fears of more attacks
பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல்: 18 பேர் பலி


பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள ஜல்மக்சியில் உள்ள சூஃபி மசூதியில் மர்ம நபர் ஒருவர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் குழந்தைகள், போலீஸ் அதிகாரிகள் உள்பட கிட்டத்தட்ட 18 பேர் வரை பலியாகியுள்ளதாகவும், 27க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், 14க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தற்கொலைப் படை தாக்குதல் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 13 பேர் வரை பலியானதாகவும், பலர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தானில் பரபரப்பு நிலவுகிறது.

A suicide attacker blew himself up outside a Sufi shrine in southwest Pakistan Thursday, killing 18 people amid threats of more attacks in the terror-striken nation, officials said.

அடுத்த செய்தி