ஆப்நகரம்

குவெட்டா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் அதிபர்

குவெட்டா பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று, பாகிஸ்தான் அதிபர் மாமூன் ஹூசைன் சவால் விடுத்துள்ளார்.

TNN 14 Aug 2016, 10:54 pm
குவெட்டா பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று, பாகிஸ்தான் அதிபர் மாமூன் ஹூசைன் சவால் விடுத்துள்ளார்.
Samayam Tamil pakistan will avenge quetta massacre president
குவெட்டா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் அதிபர்


குவெட்டாவில் அமைந்துள்ள மருத்துவமனையில் கடந்த 8ம் தேதியன்று ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுவெடிப்பில், 74 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். குவெட்டா மருத்துவமனை தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, மேலும் பல தாக்குதல்களை நடத்தவும் உள்ளதாக, எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தானின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, உரை நிகழ்த்திய அந்நாட்டு அதிபர் மாமூன் ஹூசைன், குவெட்டா மருத்துவமனை தாக்குதலை மறக்கமாட்டோம் எனக் குறிப்பிட்டார். அந்த தாக்குதலில் உயிரிழந்த, காயம் அடைந்த ஒவ்வொருவருக்கும் உரிய பதில் சொல்ல பாகிஸ்தான் கடமைப்பட்டுள்ளது.

அதற்கான விலையை ஐஎஸ் அமைப்பு கொடுக்க வேண்டியிருக்கும். அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய தீவிரவாத தாக்குதல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், விரைவில் ஐஎஸ் அமைப்புக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அதிபர் மாமூன் ஹூசைன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி