ஆப்நகரம்

தக்காளி விலை ரூ.300 எட்டிய போதும், இந்தியாவிடம் கையேந்த விரும்பாத பாகிஸ்தான்!

தக்காளி விலை எவ்வளவு ஏறினாலும், இந்தியாவிடம் மட்டும் வாங்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

TNN 27 Sep 2017, 10:02 am
இஸ்லாமாபாத்: தக்காளி விலை எவ்வளவு ஏறினாலும், இந்தியாவிடம் மட்டும் வாங்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
Samayam Tamil pakistan wont buy from india
தக்காளி விலை ரூ.300 எட்டிய போதும், இந்தியாவிடம் கையேந்த விரும்பாத பாகிஸ்தான்!


பாகிஸ்தான் நாட்டின் உள்ளூர் மார்க்கெட்டில் தக்காளி பற்றாக்குறை நிலவி வருகிறது. ஆண்டுதோறும் காய்கறிகள் பற்றாக்குறையை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து பூர்த்தி செய்து கொள்கிறது.

இதற்கிடையில் எல்லையில் கண்டெய்னர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லாகூரில் ஒரு கிலோ தக்காளி ரூ.300க்கு விற்கப்படுகிறது.

இருப்பினும் இந்தியாவில் இருந்து தக்காளியை வாங்க மாட்டோம் என்று உணவுத்துறை அமைச்சர் ஷிகந்தர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஷிகந்தர், பாகிஸ்தானில் நிலவும் தக்காளி, வெங்காய பற்றாக்குறை ஓரிரு நாளில் சரி செய்யப்படும் என்றார்.

அதற்காக பலுசிஸ்தானில் இருந்து விளைப் பொருட்கள் வாங்கப்படும் என்று தெரிவித்தார். உணவுத்துறை அமைச்சரின் நடவடிக்கைக்கு லாகூர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.

நம் நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்ய போதிய வளங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

Pakistan wont buy from India.

அடுத்த செய்தி