ஆப்நகரம்

தங்கத்திற்கு பதிலாக தக்காளிகளை அணிந்துகொண்ட பாகிஸ்தான் மணப்பெண்..

தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் மணப்பெண் ஒருவர் நகை ஆபரணங்களுக்கு பதிலாக தக்காளிகளை அணிந்துகொண்ட சம்பவம் வியக்கும் வகையில் உள்ளது.

Samayam Tamil 20 Nov 2019, 5:11 pm
நாட்டில் உள்ள குறைகளை வித்தியாசமாக எடுத்துச் சொல்வது வழக்கமாகி விட்டது. அதுபோல பாகிஸ்தானில் தக்காளியின் விலை உயர்வை எடுத்துச் சொல்லும் வகையில் மணப்பெண் ஒருவர் தங்க நகைகளுக்கு பதிலாக தக்காளியை அணிந்து கொண்டு வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Samayam Tamil தங்கத்திற்கு பதிலாக தக்காளி நகைகளை அணிந்துகொண்ட பாகிஸ்தான் மணப்பெண்..


ஆப்கன் ஹெலிகாப்டர் விபத்தில் அமெரிக்க வீரர்கள் இருவர் பலி

பாகிஸ்தான் மாநிலம் லாகூர் நகரில் நடைபெற்ற திருமண விழாவில் மணப்பெண் தன்னுடைய நெற்றி, கைகளில் தக்காளி பழங்களை ஆபரணங்களாக உடுத்திக்கொண்டு மணமேடையில் அமர்ந்திருந்தார்.

அதுபோல ஒட்டியாணம், செயின் ஆகியவற்றிற்கு பதிலாக தக்காளிகளான மாலைகளை அணிவித்திருந்தார். இதுகுறித்து ஒரு பத்திரிகையாளர் அந்த மணப்பெண்ணிடம் கேட்டதில் பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

சிகிச்சைக்காக லண்டன் சென்றடைந்தார் நவாஸ் ஷெரீப்

இதனால் மக்களிடத்தில் தக்காளிக்கு தங்கத்தை போல மதிப்பு கூடியுள்ளது. அதனால் என்னுடைய திருமணத்திற்கு தங்க நகைக்கு பதிலாக தக்காளியை பயன்படுத்த விரும்பினேன் என்றார்.

அடடா என்ன அதிசயம்... அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ள மாட்டுச் சாண வரட்டி!!

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி மளமளவென லைக்குகளையும், கருத்துக்களையும் பெற்று வருகிறது. இந்த சம்பவம் நகைச்சுவையாக கருதப்பட்டாலும் தக்காளியின் விலை ஏற்றதால் பாமர மக்கள் படும் அவதியையும் சுட்டி காட்டுகிறது.

அடுத்த செய்தி