ஆப்நகரம்

வெள்ள நீரில் மிதந்தபடி, நிர்வாகக் குறைபாட்டை எடுத்துரைத்த செய்தியாளர்!

நீரில் மிதந்தபடி சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு எடுத்துரைத்த செய்தியாளருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

Samayam Tamil 6 Jul 2018, 12:32 am
லாகூர்: நீரில் மிதந்தபடி சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு எடுத்துரைத்த செய்தியாளருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
Samayam Tamil Pakistan reporter


உங்களது செய்தியை அனைத்து இடங்களுக்கும், அனைவரும் கவனிக்கும் வண்ணம் கொண்டு செல்வது எப்படித் தெரியுமா? வித்தியாசமான மற்றும் அதீத ஆர்வத்துடன் செயல்படுதல். அதைத் தான் பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் செய்துள்ளார்.

துன்யா நியூஸ் தொலைக்காட்சியில் பணியாற்றும் இவர், லாகூரில் பெய்த கனமழையால் ஓடும் வெள்ளநீர் குறித்து எடுத்துரைத்தார். அதற்காக நீச்சல் குளங்களில் குழந்தைகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் மிதவைகளை பயன்படுத்தியுள்ளார். முறையான வடிகால் மற்றும் தூர்வாறுதல் பணிகளை லாகூர் நிர்வாகம் செய்யவில்லை.

இதன் காரணமாக, கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் செய்தியை வெளியுலகிற்கு தெரியப்படுத்திய போது, ‘நான் நீச்சல் குளத்தில் தற்போது இல்லை. நீர் நிறைந்த சாலையில் தான் இருக்கிறேன். லாகூரில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

எனது பொழுதை சிறப்பாகக் கழிக்க இங்கு வந்திருக்கிறேன்’ என்று கூறினார். குறிப்பாக நீர் மேலாண்மை துறையின் தவறை, கெட்ட வார்த்தைகள் மூலம் திட்டாமல், மறைமுக சுட்டிக் காட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Pakistani Reporter Chills In An Inflatable Pool During A Flood To Get The Authorities' Attention.

அடுத்த செய்தி