ஆப்நகரம்

தலீபான் பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவர் தேர்வு!

பாகிஸ்தான் தலீபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் புதிய தலைவராக முஃப்தி வாலி மஷூத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 24 Jun 2018, 1:13 pm
பாகிஸ்தான் தலீபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் புதிய தலைவராக முஃப்தி வாலி மஷூத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil TERRORISM-facebook
தலீபான் பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவர் தேர்வு!


பாகிஸ்தானில் இயங்கும் தலிபான் என்னும் பயங்கரவாத இயக்கம் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள குனார் மாகாணத்தில், அமெரிக்க ஆளில்லா விமானம் கடந்த 14ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. இதில் அங்கு மறைந்திருந்த பாகிஸ்தான் தலீபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மெய்லானா பஸூல்லா கொல்லப்பட்டார்.

இதையடுத்து தங்களது புதிய தலைமையை அந்த இயக்கம் தேர்வு செய்துள்ளது. இதுகுறித்து தலீபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் முகமது குராசனி கூறுகையில், தெஹ்ரீக்–ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் புதிய தலைவராக முஃப்தி வாலி மஷூதும், துணைத் தலைவராக முஃப்தி ஹப்ஸூல்லா என்று அழைக்கப்படும் முஃப்தி மாஷிமும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த செய்தி