ஆப்நகரம்

பாக். நவாஸ் குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவருடைய குடும்பத்தினர்களின் சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 22 Sep 2017, 9:13 pm
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவருடைய குடும்பத்தினர்களின் சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil pakistans anti graft body freezes bank accounts of nawaz sharif family
பாக். நவாஸ் குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம்


பாகிஸ்தானின் பிரதமராக நவாஸ் ஷெரிப் இருந்த போது, அவர் மீது பனமா கேட் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. இது குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்துமாறு கடந்த மே மாதம் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த உச்சநீதிமன்றம், நவாஸ் ஷெரிப்பை தகுதி நீக்கம் செய்தது. இதைத் தொடர்ந்து, அவரும் கடந்த ஜீலை மாதம் 28 ம் தேதி, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து நவாஸின் மனைவிக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயத்தால், தனது குடும்பத்தினருடன் லண்டன் சென்றார். இதனால், தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையில் நவாஸ் ஷெரிப்பால் ஆஜராக முடியவில்லை.

இந்நிலையில், நவாஸ் ஷெரிப் மற்றும் அவருடைய குடும்பத்தினர்களின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை ஊழல் தடுப்பு பிரிவு முடக்கியுள்ளது.

அடுத்த செய்தி