ஆப்நகரம்

பனாமா பேப்பர்ஸ் வழக்கில் இன்று தீர்ப்பு: பாகிஸ்தான் பிரதமரின் கதி என்ன?

பனாமா கேட் வழக்கில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.

TNN 28 Jul 2017, 8:44 am
பனாமா கேட் வழக்கில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.
Samayam Tamil panama papers nawaz sharifs fate hangs in balance as pakistan sc all set to deliver verdict today
பனாமா பேப்பர்ஸ் வழக்கில் இன்று தீர்ப்பு: பாகிஸ்தான் பிரதமரின் கதி என்ன?


பனாமா நாட்டில் உள்ள புகழ்பெற்ற, 'மொசாக் பொன்சேகா' நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர் என்று பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் பல்வேறு ஆவணங்கள் கடந்த ஆண்டு வெளியாகின. அந்த பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பயரும் பெயரும் இருந்ததால், அவருக்கு எதிராக விசாரணை உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கில் சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆறு உறுப்பினர்கள் அடங்கிய கூட்டு புலனாய்வுக்குழு விசாரணையில் நவாஸ் உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் வாக்குமூலம் அளித்தனர். பின்னர், அவர்களுக்கு நெருக்கமானவர்களிடமும் விசாரணை நடந்தது.

இக்குழுவின் அறிக்கை ஜூலை 10ஆம் தேதி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருக்கிறது என்றும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக, நவாஸ் ஷெரிப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதித்தீர்ப்பை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.

அடுத்த செய்தி