ஆப்நகரம்

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை; கிறிஸ்துவ பாதிரியார்களுக்கு எச்சரிக்கை விடுத்த போப் ஆண்டவர்!

பாலியல் விவகாரத்தில் கிறிஸ்துவ பாதிரியார்களுக்கு போப் ஆண்டவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 26 Aug 2018, 11:48 am
டுப்ளின்: பாலியல் விவகாரத்தில் கிறிஸ்துவ பாதிரியார்களுக்கு போப் ஆண்டவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil Pope Francis


அயர்லாந்து நாட்டிற்கு போப் ஆண்டவர் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். கடந்த 39 ஆண்டுகளில் அயர்லாந்து செல்லும் முதல் போப் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், குழந்தைகளுக்கு கிறிஸ்துவ மதகுருக்களால் வெறுக்கத்தக்க பாலியல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இதனைத் தடுக்க கத்தோலிக்க திருச்சபைகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கான நான் வெட்கப்படுகிறேன். கத்தோலிக்க கிறிஸ்துவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன்.

அதில், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி குறித்து கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் அவர்களே பாலியல் துன்புறுத்தலை அளிக்கின்றனர்.

இதுகுறித்து இனியும் அமைதி காக்க முடியாது. இதேபோல் மீண்டும் நடந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊழியர்களின் செயல்பாட்டால், கத்தோலிக்க மக்களுக்கு வலிமையும், அவமானமும் ஏற்பட்டுள்ளது. இதை நான் உணர்கிறேன் என்று போப் பிரான்சிஸ் கூறினார்.

Papal visit Pope shamed by Church's abuse failures.

அடுத்த செய்தி