ஆப்நகரம்

பப்புவா நியூ கினியா நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம்!

பப்புவா நியூ கினியா நாட்டில், சதர்ன் ஹைலேண்ட் மாகாணத்தில் கலவரம் வெடித்ததையடுத்து, 9 மாதங்களுக்கு அங்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Jun 2018, 3:21 pm
பப்புவா நியூ கினியா நாட்டில், சதர்ன் ஹைலேண்ட் மாகாணத்தில் கலவரம் வெடித்ததையடுத்து, 9 மாதங்களுக்கு அங்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil pap
பப்புவா நியூ கினியா நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம்!


பப்புவா நியூ கினியா நாட்டில், சதர்ன் ஹைலேண்ட் மாகாணத்தில் நடைபெற்ற கவர்னர் தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இந்த தேர்தலில் ஒருதரப்பு கட்சியினர் தோல்வியை தழுவியதை அடுத்து, நீதிமன்ற தீர்ப்பும் அவர்களுக்கு எதிராக அமைந்தது.

இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள்கடந்த வியாழக்கிழமை கடும் வன்முறையில் ஈடுபட்டனர். தலைநகர் மென்டியில் உள்ள விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் அங்குள்ள ஒரு விமானத்திற்கு தீ வைத்தனர். இதனைத் தொடர்ந்து சில கட்டிடங்களுக்கு தீ வைத்தபோராட்டக்காரர்கள், நிலநடுக்க பாதிப்புக்கான நிவாரணப் பொருட்கள் வைத்திருந்த குடோனையும் சூறையாடி சென்றனர்.

இந்த நிலையில் கலவரம் மேலும் பரவி, நிலைமை கட்டுக்கடங்காமல் போனதையடுத்து, சதர்ன் ஹைலேண்ட மாகாணத்தில் தற்போது நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

9 மாதங்களுக்கு இந்த நெருக்கடி நிலை அமலில் இருப்பதாகவும், அதுவரை மாகாண அரசு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் பிரதமர் பீட்டர் ஓ-நீல் அறிவித்துள்ளார். மேலும் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அடுத்த செய்தி