ஆப்நகரம்

பப்புவா நியூகினியாவில் நெருக்கடி நிலை பிரகடனம்

பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அங்கு 9 மாதங்கள் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Jun 2018, 5:25 am
பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அங்கு 9 மாதங்கள் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil 9871778-3x2-700x467


பப்புவா நியூகினியா நாட்டின் சதர்ன் ஹைலேண்ட் மாகாண ஆளுநர் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் கடும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதில் அந்த மாகாண தலைநகரான மென்டியில் விமானத்திற்கு தீ வைத்தனர். சில கட்டடங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. கலவரம் மேலும் பரவாமல் இருக்க சதர்ன் ஹைலேண்ட் மாகாணத்தில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அந்நாட்டுப் பிரதமர் பீட்டர் ஓ நீல் அறிவித்துள்ளார்.

9 மாதங்களுக்கு இந்த நெருக்கடி நிலை அமலில் இருக்கும். அதுவரை மாகாண அரசு சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி