ஆப்நகரம்

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேயரின் கல்லறை சேதம்... லண்டனில் பரபரப்பு!!

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் கல்லறை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 Sep 2020, 12:32 am
மதுரை, தேனி உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழக - கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் ஆங்கிலேயரான கர்னல் ஜான் பென்னிகுவிக். தனது சொத்துகளை விற்று அவர் கட்டிய இந்த அணையால் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் இன்றளவும் பயனடைந்து வருகின்றனர்.
Samayam Tamil pennicuick


இதன் காரணமாக தென்மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பென்னிகுவிக்கை கடவுளாகவே வழிபட்டு வருகின்றனர். தமிழக அரசு சார்பில் கூடலூரில் இவருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு ஆள் உயர வெண்கல சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்புகள்மிக்க பென்னிகுவிக், கடந்த 1913 ஆம் ஆண்டு, அவரது சொந்த ஊரான லண்டனில் உயிரிழந்தார். அவருக்கு அங்குள்ள செயின்ட் பீட்டர்ஸ் பர்க் தேவாலயத்தில் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது.

மாயமான அதிபரின் தங்கை... வடகொரியாவில்தான் இந்தக் கூத்து!!

லண்டன் வாழ் தமிழர்கள் இந்த கல்லறைக்கு அவ்வபோது சென்று புகைப்படம் எடுத்துகொள்வது வழக்கம். இந்நிலையில் நேற்று இந்த கல்லறையின் மீது அமைக்கப்பட்டு இருந்த சிலுவை வடிவிலான பாறை இடித்து அகற்றப்பட்டுள்ளது. இதனையறிந்து அதிர்ச்சியடைந்த தேவாலய நி்ர்வாகம் போலீஸுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் லண்டன் மாநகர போலீஸார், பென்னிகுவிக்கின் கல்லறையை சேதப்படுத்தியவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.

அடுத்த செய்தி