ஆப்நகரம்

பாக், ராணுவத்துக்கு நிதியுதவியை நிறுத்த அமெரிக்கா முடிவு

பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை எடுக்காததற்காக பாகிஸ்தானுக்கு வழங்கும் 300 மில்லியன் டாலர் நிதியுதவியை நிறுத்த அமெரிக்க ராணுவம் முடிவுசெய்துள்ளது.

Samayam Tamil 2 Sep 2018, 11:15 am
வாஷிங்டன்: பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை எடுக்காததற்காக பாகிஸ்தானுக்கு வழங்கும் 300 மில்லியன் டாலர் நிதியுதவியை நிறுத்த அமெரிக்க ராணுவம் முடிவுசெய்துள்ளது.
Samayam Tamil 65641624


அண்மையில், பாகிஸ்தான் அரசு பயங்கரவாத அமைப்புகளுக்கு துணை போகிறது என்றும் 17 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றி வருகிறது என்றும் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்தப்போவதாக தெரிவித்தார்.

இதன்படி, அமெரிக்க சர்வதேச ராணுவ பள்ளியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சேர தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்திற்காக அமெரிக்க ராணுவம் வழங்கும் 300 மில்லியன் டாலர் நிதியுதவியையும் நிறுத்தப்போவதாக முடிவுசெய்திருக்கிறது.

அண்மையில் பாலஸ்தீன அகதிகளுக்கான நிதியுதவியையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி