ஆப்நகரம்

கொடிய வியாதியால் சித்ரவதைப்படும் பர்வேஸ் முஷாரப்

யணத்தின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர் கண்டிப்பாக பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Samayam Tamil 17 Oct 2018, 4:50 pm
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கொடிய வியாதியால் துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
Samayam Tamil WhatsApp-Image-2018-10-15-at-2.07.33-AM-1024x576.


துபாயில் உள்ள அமெரிக்கன் மருத்துவமனையில் நாள்பட்ட கொடிய நோயினால் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து தினமும் ஒராண்டுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஏமிலோய்டு எனப்படும் ஒரு புரதத்தின் அளவு உடலில் அளவுக்கு அதிகமாகப் பெருகியதால் ஏமிலோய்டோசிஸ் என்ற நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார். சிறுநீரகக் கோளாறுக்காகவும் லண்டன் மற்றும் அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.

இதனால் பயணத்தின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர் கண்டிப்பாக பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் இவர் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்கு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் அவற்றில் தீர்ப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி