ஆப்நகரம்

மகாராணி போல தனி ஆளாக விமானத்தில் பயணம் செய்த இளம்பெண்..!!

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனி ஒரு ஆளாக விமானத்தில் பயணம் செய்த சம்பவம் இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

Samayam Tamil 4 Jan 2019, 3:54 am
தனி ஆளாக மகாரானியை போல விமானத்தில் பயணம் செய்ததாக இளம் பெண் ஒருவர் பதிவிட்டது உலகளவில் வைரலை கிளப்பியுள்ளது. அந்த பதிவை படிக்கும் பலரும் இளம்பெண்ணுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil தனி ஆளாக விமானத்தில் பயணம் செய்த இளம்பெண்


பிலிஃபைன்ஸை சேர்ந்த லூயிஷா எர்பிஸ், டாவோவில் என்ற நகரிலிருந்து மணிலாவுக்கு பயணம் செய்ய பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான பிஆர் 2820 (PR 2820) என்ற விமானத்தில் பயணம் சீட்டு எடுத்திருந்தார்.


வழக்கமான பரிசோதனைகளை முடித்துவிட்டு விமானம் ஏறிய போது லூயிஷா எர்பிஸுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அந்த விமானத்தில் அவர் மட்டும் இருந்தார். அவரை தவிர வேறு பயணிகள் யாருமில்லை.

இதனால் பதற்றமடைந்த அவர், விமானத்தை விட்டு இறங்கிவிடலாம் என்று முயற்சிக்கையில் விமான பணியாளர்கள் கேட்டுக் கொண்டதால் தனி ஆளாக பயணம் செய்துவிடலாம் என அவர் முடிவு எடுத்துவிட்டார்.


விமானமும் இயக்கப்பட்டது, இந்த வரலாற்று சிறப்புமிக்கச் தருணத்தை உணர்ந்த பயணிகள், இளம்பெண் லூயிஷா உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் லூயிஷா தனது இந்த பயண அனுபவத்தை குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

அவரது பதிவை பலரும் விரும்பிய நிலையில், லூயிஷாவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். மேலும் பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை வெகுவாக பாராட்டி நெட்டிசன்களும் கருத்து பதிவிட்டனர்.


ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடைபெறுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாக கரோன் கிரீவ் என்ற பெண்ணுக்கு இப்படி ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் இருந்து கிரேட் என்ற இடத்திற்கு பயணம் செய்ய ஜெட்2 விமானத்தில் அவர் டிக்கெட் புக் செய்திருந்தார்.

ஆனால் அவருடன் பயணம் செய்ய இருந்த மற்ற அனைத்து பயணிகளும் டிக்கெட்டை ரத்து செய்து விட்டனர். இதனால் விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்யும் வாய்ப்பு கரோன் கிரீவுக்கு கிடைத்தது. இதற்காக அவர் செலவிட்ட தொகை, இந்திய மதிப்பில் வெறும் ரூ. 5 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி