ஆப்நகரம்

பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு?

துருக்கியில் வாடிக்கையாளருக்கு கொண்டு செல்லும் பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி பாய்க்கு 18 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கபட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 11 Oct 2018, 4:08 pm
துருக்கியின் வடமேற்குப் பகுதியின் எஸ்கிசஹிர் நகரில் சில மாதங்களுக்கு முன் நடந்துள்ளது. இதற்காக நடந்த விசாரணையில் அந்த டெலிவரி பாய்க்கு 18 ஆண்டுகள் வரை சிறைத் தண்டணை விதிக்க வாய்ப்புள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
Samayam Tamil 10


இதுகுறித்து துருக்கி போலீஸார் கூறுகையில், ‘18 வயதான புரக், வாடிக்கையாளர் ஹுசையினுக்கு வழங்கிய பீட்சாவில் எச்சில் துப்பி, மொபைலில் வீடியோ பதிவுச் செய்துள்ளார்.

இதை சிசிடிவி கேமராவில் பார்த்த ஹுசையின் உறவினர் அவரிடம் கூற அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இதில் அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படலாம்" என்றார்.

ஆனால் இதை புரக் மறுத்துள்ளார். இந்த வழக்கில் வாடிக்கையாளரின் உணவை சேதப்படுத்திய குற்றத்துக்காக நீதிமன்றத்தால் புரக் சிறைத் தண்டனை பெறலாம் என தெரிகிறது.

அடுத்த செய்தி