ஆப்நகரம்

இளவரசர் சார்லஸ், பிரதமர் தெரசாவை சந்தித்த மோடி!

அரசுமுறை பயணமாக பிரட்டன் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் இளவரசர் சார்லஸ் மற்றும் பிரதமர் தெரசாவை சந்தித்து பேசினார்.

Samayam Tamil 19 Apr 2018, 5:03 am
அரசுமுறை பயணமாக பிரட்டன் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் இளவரசர் சார்லஸ் மற்றும் பிரதமர் தெரசாவை சந்தித்து பேசினார்.
Samayam Tamil modi theresa


ஐந்து நாள் அரசுமுறை பயணமாக வெளிநாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி முதலில், சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம்சென்றார். அந்நாட்டின் மன்னர் 16ம் காரல் கஸ்டாபை சந்தித்த மோடி, இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார்.

பின்னர், நேற்று சுவீடன் நாட்டில் இருந்து பிரட்டன் சென்றடைந்தார். ஹீத்ரோ விமானநிலையம் சென்ற அவருக்கு , பிரிட்டன் வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜான்சன் நேரில் சென்று வரவேற்றார்.

தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை, அவரது அலுவலகத்துக்கு சென்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், கமென்வெல்த் மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவும் இங்கிலாந்தும் வளமான பாதுகாப்பான நியாயமான எதிர்காலத்தை உருவாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளிக்கப்பட்டது.

அடுத்த செய்தி